search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிக்ஸ் மாநாடு"

    • பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
    • உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது.

    அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார்.

    ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

    உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

    உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும்.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    யு.பி.ஐ. தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.

    சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • இன்று முதல் 24-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம்
    • 40 வருடத்திற்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்திய பிரதமர்

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று புறப்பட்டு செல்கிறார். இன்று முதல் 24-ந்தேதி வரை இந்த சுற்றுப் பயணம் மூன்று நாட்கள் கொண்டது. தென்ஆப்பிரிக்கா அதிபர் அழைப்பின் பேரின் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    அதனைத் தொடர்ந்து ஜோகன்னஸ்பர்க்கில பல நாட்டின் பிரதமர்கள் மற்றும் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

    தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்து, அங்கிருந்து கிரீஸ் செல்கிறார். கிரீஸ் பிரதமர் அழைப்பின்பேரின் வருகிற 25-ந்தேதி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சென்றடைகிறார்.

    மிகவும் தொன்மையான நிலத்திற்கு முதல் முறையாக செல்ல இருக்கிறார். மேலும், 40 வருடத்திற்குப் பிறகு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • இந்தாண்டு சீனா தலைமையில் 14-வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் தொடங்குகிறது.
    • சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

    புதுடெல்லி:

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

    இந்தாண்டு சீனா தலைமையில் 14-வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சீன அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை பிரிக்ஸ் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். அவருடன் ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    மாநாட்டையொட்டி இன்று நடக்கும் வர்த்தக கூட்டத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை வாசிக்கப்படும்.

    நாளை மறுநாள் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளின் உயர்மட்டக் கூட்டம் நடக்க உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×